சிம்லா, பிப். 28 - நாட்டில் எதிர்க்கட்சிகளே இல்லாத சூழலை உருவாக்க மோடி அரசு தொடர்ந்து சூழ்ச்சிகளை அரங்கேற்றி வரு கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி களின் தலைவர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக் களை விலைக்கு வாங்கியும்; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கும் மாநிலங்களில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியும் சட்டவிரோத ஆட்சியை அமைக்கிறது. பாஜகவின் இந்த இழிவான அரசியலால் வடகிழக்கு மாநிலங்கள், மகாராஷ்டிரா, முன்பு மத்தி யப்பிரதேசம், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் எதிர்க்கட்சி ஆட்சி கவிழ்க்கப்பட்டு, பாஜக ஆட்சி அமைத்தது.
இந்நிலையில், இதே முறையில் காங்கிரஸ் ஆளும் இமாச்சலப் பிரதேசத்தி லும் ஆட்சியைக் கவிழ்க்க, காங்கிரஸ் கட்சி யின் 6 எம்எல்ஏக்களை கடத்தி தங்கள் பக்கம் இழுத்துள்ளது பாஜக. செவ்வாயன்று நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக வாக்களித்த 6 காங்கிரஸ் மற்றும் 3 சுயேச்சை எம்எல்ஏக் களை பாஜக குண்டர்கள் கடத்தி ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள அரசினர் விடுதியில் அடைத்து வைத்தனர்.
அதன்பிறகு 6 காங்கிரஸ் எம்எல்ஏக் களும் 3 சுயேட்சை எம்எல்ஏக்களுடன் கூட்டாக புதனன்று ஹெலிகாப்டர் மூலம் சட்டமன்றத்திற்கு வந்தனர். 9 எம்எல்ஏக் களும் சட்டமன்றத்தை அடைந்த பொழுது பாஜக எம்எல்ஏக்கள் மேசையை தட்டி “ஜெய்ஸ்ரீராம்” என கூச்சல் போட்டனர்.
அமைச்சர் ராஜினாமா
6 எம்எல்ஏக்கள் பாஜகவின் பக்கம் சாய்ந்த நிலையில், இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மக னும், சிம்லா புறநகர் தொகுதி எம்எல்ஏவு மான விக்ரமாதித்ய சிங் மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ளார். இவர் புதனன்று மாநிலத்தின் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறி வித்துள்ளார். அமைச்சர் பதவியை ராஜி னாமா செய்துள்ள விக்ரமாதித்ய சிங் முதல்வர் பதவி கேட்டு ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியுடன் மோதல் போக்கை கடைபிடித்தார். அதன்பிறகு காங்கிரஸ் மேலிடம் சமாதானப்படுத்தியதால் மனம் மாறி பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்யா மூலம் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி யைக் கவிழ்த்தது போல, இமாச்சலப்பிர தேசத்தில் விக்ரமாதித்ய சிங் மற்றும் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் பாஜக ஆட்சி யை கைப்பற்ற சதி வேலைகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளது என்பது தெளிவாகி யுள்ளது.
15 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்
புதனன்று இமாச்சலப்பிரதேச சட்ட மன்றத்தில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடைபெற்ற பொழுது எதிர்க்கட்சித் தலைவர் ஜெய் ராம் தாக்கூர் உட்பட 15 பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன்பு அரசு பெரும்பான்மை இழந்துவிட்டது எனக் கோஷங்களை எழுப்பினர். இதனால் அமளி யில் ஈடுபட்ட 15 பாஜக எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு, பட்ஜெட் கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் சபா நாயகர் குல்தீப் சிங் பதானியா ஒத்தி வைத்தார்.
இதனிடையே தங்களது ஆட்சிக்கு எதி ராக நிலவும் அரசியல் குழப்பத்தை சமாளிக்க காங்கிரஸ் மேலிடம் பூபேஷ் பாகேல், பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட மூத்த தலைவர்களை சிம்லா விற்கு அனுப்பி வைத்துள்ளது.
‘நான் போர் வீரன் : ராஜினாமா செய்யும் அளவிற்கு கோழை இல்லை’
இமாச்சல் அர சியல் குழப்பத்திற்கு இடையே அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக செய்திகள் வெளியாகின. இதற்கு பதிலளித்த அவர், “சில ஊடகங்களில் நான் ராஜி னாமா செய்ததாக செய்திகள் வரு கின்றன. நான் ராஜினாமா செய்ய வில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்பு கிறேன். நான் ஒரு போர்வீரன். பெரும்பான்மையை நிரூபிப்போம். காங்கிரஸ் அரசு தனது 5 ஆண்டு கால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யும்” எனக் கூறினார்.